Sunday, June 14, 2015

2. ப்ரேமையின்வடிவில் (ஓம் குருநாதா ஞானானந்தா)


( ஓம் குருநாதா ஞானானந்தா )
ப்ரேமையின்வடிவில் திரும்பவும்வரணும் வரணும்வரணும்சாயீசா(2)
ஊன்உருகும்பர மானந்தம்பெருகிடும் உன்பெயர்சொல்லிட சாயீசா
மீண்டும்தொடங்கிடு ப்ரேமையின்நாடகம் அவதரித்தேநீ சாயீசா
(ப்ரேமையின்வடிவில்..)

சத்தியத்தின்உரு வாகிப்பிறந்திட்ட நித்தியமே சாயீசா (2)
பார்பிறப்பாய் ப்ரேமையின்வடிவினில் மீண்டுமேநீ சாயீசா (2)
(ப்ரேமையின்வடிவில்..)

அன்பைதினம்தரும் வேண்டும்வரம்தரும் பொற்கரனே சாயீசா (2)
சத்தியவடிவினில் உலகினில்தோன்றிய நித்தியனே சாயீசா(2)
(ப்ரேமையின்வடிவில்..)

நாமாவளி
ஓம் குருநாதா சாய்நாதா சரணம் சரணம் சாயீசா
சத்குருநாதா சாயிராமா சரணம் சரணம் சாயீசா
ப்ரேமசாயி பகவானுக்கி – ஜெய்

No comments:

Post a Comment