Showing posts with label முத்துக் குமரன் காவியுடுத்தான். Show all posts
Showing posts with label முத்துக் குமரன் காவியுடுத்தான். Show all posts

Sunday, May 3, 2020

471. சத்தே சித்தே (முத்துக் குமரன் காவியுடுத்தான்)


சத்தே சித்தே சத்தியமே-என் சாயிபிரானே
ஒளிர் முத்தே-மணியே மாணிக்கமே-நீ ப்ரேமையின் ஆறே
மண்ணுலகில் உன்-பதங்கள் திரும்புகின்ற நாளை
நான் எதிர்பார்த்துக் கடத்துகிறேனே யுகமென நாளை
(2)
சத்தே சித்தே சத்தியமே-என் சாயிபிரானே
(MUSIC)
பஜனைகளைப் பாடிடுவார் தினம் காலை மாலை
வேத ஒலியினிடை நீ-நடக்கும் நாளுக்கு நாளை
(2)
கடத்துகின்ற என்-பிறப்பை கண்டிடு தாயே (2)
உந்தன் தரிசனத்தை எதிர்பார்த்தே நடத்துவேன் வாழ்வை (2)
சத்தே சித்தே சத்தியமே-என் சாயிபிரானே
(MUSIC)
ஆண்டவனாம் உனக்கிருக்கு ஆயிரம்-வேலை
அதன் இடையினிலே நீ நினைப்பாய் எனைக்-கண வேளை
(2)
நொந்த எந்தன் சேய்-மனமே தேடுதுன் தாளை (2)
புறக்கணித்து நீ-கிடந்து கடத்தாதே நாளை
என்னைப் புறக்கணித்து நீ-கிடந்து கடத்தாதே நாளை
சத்தே சித்தே சத்தியமே என் சாயிபிரானே
ஒளிர் முத்தே மணியே மாணிக்கமே-நீ ப்ரேமையின் ஆறே
மண்ணுலகில் உன்-பதங்கள் திரும்புகின்ற நாளை
நான் எதிர்பார்த்துக் கடத்துகிறேனே யுகமென நாளை
சத்தே சித்தே சத்தியமே என் சாயிபிரானே