Tuesday, June 23, 2015

30. மண்ணில் உலாவரவே (வானமளாவும் மா)

( வானமளாவும் மா மாமரமே )


மண்ணில்உலாவர..வேதினமே உனைவாவென்றழைக்கிற தேமனமே
நாளுமுன்பாதங்கள்ஞாலத்திலே
அதுநடக்கக்கண்டால் பே..ரானந்தமே
பர்த்தி புரீசா ஷிரிடீ..நிவாசா வரணும்வரணும் சாயீசா (2)
தேனூறும்சொல்லை தினந்தோறுமே

நீசொல்லிடவே..ணுமிப் பார்மீதிலே
திருநீறையளித்திட வாசாயிராம்
இந்தப்பாவியுளம்அதைத் தான்வேண்டுதாம்
பர்த்தி புரீசா ஷிரிடீ..நிவாசா வரணும்வரணும் சாயீசா (2)
விழி நீர் பெருகுது துடைத்திடவா..
இங்கு உன்னிருகண்வரும் கருணையைத்தா
என் நெஞ்சம்-உறைந்திருந்து-ஞானா..னந்தம்
தந்திடு கைகொடு தாயாய்-நீவா
பர்த்தி புரீசா ஷிரிடீ..நிவாசா வரணும்வரணும் சாயீசா (2)
சத்தியரூபத்தில் வந்..தவனே
சாயி நித்திலமே-ஒளி தந்திடவா
 உன் பொன்மலர்ப் பாதங்கள் மண்ணில்நடக்கின்ற
 நன்னாளை சாயிநீ சீக்கிரம்தா
பர்த்தி புரீசா ஷிரிடீ..நிவாசா வரணும்வரணும் சாயீசா (2)
சக்தியும்சிவனுமாய்க் கலந்தவனே
உந்தன் கருணையி லேமனம் கரைபவனே
என்தந்தை-சா..யீஸ்வரன் பொற்பதமே
அதைக்கண்டிடக் கண்கோடி வேண்டுகிறேன்
 (பர்த்தி புரீசா ஷிரிடீ..நிவாசா) (2)





 


No comments:

Post a Comment