Monday, July 6, 2015

48. நெஞ்சுக்குள் நீவரும் ( நெஞ்சுக்கு நீதியும்)


 
 
( நெஞ்சுக்கு நீதியும் )
 

நெஞ்சுக்குள் நீவரும் நாளுக்கு..மே மனம் ஆசையில் ஏங்கிடுமே(2)
அஞ்சிடவே வரும் துன்பங்கள்-யாவுமுன் பார்வையில் போய்-விடுமே
வெஞ்சினமின்றி வினைஇன்றி -

தீதின்றி..மெய்யகமானவனே (2)
தஞ்சமென்றே உனையே அடைந்தோம் சாயிராம் சாயிராம் சாயிராம் (2)

ஓதிடும் நான்மறை மெய்ப்பொருளாம்இறை ஆனவனே சாயிராம்
கும்பிடவேறொரு சக்திஉண்டா உனைக் கும்பிடுவோம் தினமே
வல்வினை தீர்க்கு மிடர்தனைப் போக்கிடும் அச்சமிலாதபடி (2)
இம்மைக்கும் மறுமைக்கும் வாழ்வுதரும் இறைவன் சாயிராம் சாயிராம்


நெஞ்சமலர்மிசை உந்தன்பதம்வர சென்றிருள்ஓடிடுமே (2)நெஞ்சின் அலை விழும்-ஓமின்-இசை எழும் என்னப்பன் நீ-வரவே
உள்ளத்துனைத் தொழுதே பயமின்றி உலாவருவோம்-உலகில் (2)
அள்ளி-அருள் தரவே வருவாய் சாயிராம் சாயிராம் சாயிராம் (2)


சத்ய சாயி பகவானுக்கி - ஜெய்


No comments:

Post a Comment