Thursday, July 9, 2015

59. சாயிராமின் ஓம்காரக் குரல் (பாவயாமி கோபாலம்)


****

****

( பாவயாமி கோபாலம் )

சாயிராமின் ஓம்காரக் குரல் செவி-கேட்டிடும்
அற்புதம் வேண்டி-வந்தோம் நிதம்

 இனித்தினித்த தேன்பலா அவனின்மொழி மானிடா (2)
*மலையில்விளை தேனுமே அதனெதிரில் கசக்குமே
(2)
குடிக்க மனம்-ஏங்கிடும் சஞ்சலத்தில்வாடு..மேதினம் (2)
சட்டென வந்திடுசாயிராம் அமுதெனும்-குரல் வேண்டும்(2)..
சாயிராமின் ஓம்காரக் குரல் செவி-கேட்டிடும்
அற்புதம் வேண்டி-வந்தோம் நிதம்



கரமுதிரும் நீறும் வினை-போக்கும் (3)
உன்ஜோதி வரநகரும்-பாவமும் சாயிதா-சதம்
(2)

தருவாயம்மா-அருள்நிதம்
தருவாயம்மா-அருள்நிதம் கருணை-அன்னையே (2)
விரைவில் மீண்டுமே மண்ணின் மீதிலே (2)..

சாயிராமின் ஓம்காரக் குரல் செவி-கேட்டிடும்
அற்புதம் வேண்டி-வந்தோம் நிதம்


*சாயி அமுதாக குரலின் இனிப்புக்கு முன்னால் தேன் கூட இனிப்பு குறைந்து கசந்து தோன்றுமளவுக்கு இருக்கும் 


சாயி நாம சங்கீர்த்தனம் 1


No comments:

Post a Comment