Thursday, April 30, 2020

279. நல்லதோர் பாதை (நல்லதோர் வீணை- பாரதியார் )

(o.s.Arun )


நல்லதோர் பாதைதந்தே சாயி
நலந்தரும் அன்பினை அள்ளித்தந்தாய் 
பாரினில் சிவசக்தி
பாரினில் சிவசக்தி என்றே இறைவனின் வடிவினை எடுத்துவந்தாய்
நல்லதோர் பாதைதந்தே சாயி நலந்தரும் அன்பினை அள்ளித்தந்தாய்
ப்ரேமையைப் பெய்தாயே எங்கள் மனதினில் மாற்றங்கள் செய்வதற்கே
என்றுநீ என்ஸ்வாமீ இந்த நிலமிசை-மானிட உருக்கொள்வாய் 
நல்லதோர் பாதைதந்தே சாயி நலந்தரும் அன்பினை அள்ளித்தந்தாய்
இசையுடன் முன்பினைப் போல் உன்னை வேண்டியே தரிசனம் உடன் கேட்டேன் (2)
கசிகிற மனம் கொண்டேன்
கசிகிற மனம் கொண்டேன்
எந்தன் தவமென நாவிலுன் பேர் கொண்டேன்
நல்லதோர் பாதைதந்தே சாயி நலந்தரும் அன்பினை அள்ளித்தந்தாய்
நரம்பினை மீட்டிவரும் 
பெரும் இசையினில் மகிழ்ந்தருள் செய்தவனே
குறைபடு மதிகொண்டே
குறைபடு மதிகொண்டே நான்எழுதிடும் பாடலின் பிழைபொறுப்பாய் 
நல்லதோர் பாதைதந்தே 
நல்லதோர் பாதைதந்தே சாயி நலந்தரும் அன்பினை அள்ளித்தந்தாய் (2)
பாரினில் சிவசக்தி
பாரினில் சிவசக்தி
என்றே இறைவனின் வடிவினை எடுத்துவந்தாய்
நல்லதோர் பாதைதந்தே சாயி நலந்தரும் அன்பினை அள்ளித்தந்தாய்

சர்வ லோக நாயக சாயி பகவானுக்கி-ஜெய்


No comments:

Post a Comment