Thursday, January 28, 2016

81. என்ன கண்டு ஓடினாயோ (என்ன கவி பாடினாலும்)






என்ன-கண்டு ஓடினாயோ எந்தன்-மனம் ஆறவில்லை (2)
விண்ணில் என்ன கண்டனையோ சாயீ சாயீ
என்னகண்டு ஓடினாயோ எந்தன் மனம் ஆறவில்லை
விண்ணில் என்ன கண்டனையோ சாயீ சாயீ
என்னகண்டு ஓடினாயோ
(MUSIC)

அன்னையுன் மடியுமில்லை வாழ்க்கையோ பெருத்ததொல்லை (2)
ஸ்வாமியோ நீயிங்கில்லை பாரிலோர் நாதியில்லை (2)
என்னகண்டு ஓடினாயோ எந்தன் மனம் ஆறவில்லை
விண்ணில் என்ன கண்டனையோ சாயீ
என்னகண்டு ஓடினாயோ 
(MUSIC)

அபயக்கரம் தந்த எந்தன் சாயி நீயிங்கில்லை (2)
உலகினிலே உன்போல் அன்பளிக்க யாருமில்லை (2)
என்மனத்தில் நீயன்றி வேறோர் நினைவுமில்லை (2)
சாய்ராம்.. சாய்ராம்..
ஐயகோ என்செய்வேன் சாய்ராம்
ஐயகோ என்செய்வேன் நெஞ்சத்துயர் அடங்கவில்லை (2)
என்னகண்டு ஓடினாயோ எந்தன் மனம் ஆறவில்லை
விண்ணில் என்ன கண்டனையோ சாயீ
என்னகண்டு ஓடினாயோ… ஓடினாயோ… ஸ்வாமி

நாமாவளி
(பஜன்-கஸ்துரி திலகம் நாராயணம்)

சாயீ நீ உலகம் வர வேண்டுமே
கருணை மீண்டும் தர வேண்டுமே
குருவாய் அருள்தர வர வேண்டுமே
கலியுக அவதாரம் வர வேண்டுமே
நீதந்த அன்பின்று தர வேண்டுமே  (2)

No comments:

Post a Comment