Thursday, February 11, 2016

88. சத்ய சாயி பகவான் (ஆதி மூலன் மருகா)




சத்யசாயி பகவான் உலகில் நடக்கும்காலம் வருமா
நித்யமாகஅவனும் அருளைக்கொடுக்க ஞாலம் பெறுமா
சத்ய சாயி பகவான்மனித உருவம் தாங்கி வருவான் 
பிரேமசாயி வடிவாய் இனித்த பாசம்பாரில் தருவான் 
நல்ல பிரேமசாயி வடிவாய் நம்ம சத்யசாயி வருவான்

மண்ணில் நீரைக் கொடுத்தான் சாயி கண்ணின் நீரைத் துடைத்தான்
விண்ணில் ஓடி மறைந்தான் மீண்டும் கண்ணில் நீரைக் கொடுத்தான்
அந்தசத்யசாயி பகவான் உலகில் நடக்கும்காலம் வருமா
நித்யமாகஅவனும் அருளைக்கொடுக்க ஞாலம் பெறுமா
சத்ய சாயி பகவான்மனித உருவம் தாங்கி வருவான் 
பிரேமசாயி வடிவாய் இனித்த பாசம் பாரில் தருவான் 
நல்ல பிரேமசாயி வடிவாய் நம்ம சத்ய சாயி வருவான்

உண்ணசோறு தந்தான் அன்பில் கையில் நீறு தந்தான்
கண்ணின் நீர் துடைத்தான் நல்லஅன்னையாய் அணைத்தான் 
அந்தசத்யசாயி பகவான் உலகில் நடக்கும்காலம் வருமா
நித்யமாகஅவனும் அருளைக்கொடுக்க ஞாலம் பெறுமா
சத்ய சாயி பகவான்மனித உருவம் தாங்கி வருவான் 
பிரேமசாயி வடிவாய் இனித்த பாசம் பாரில் தருவான் 
நல்ல பிரேமசாயி வடிவாய் நம்ம சத்ய சாயி வருவான்

மண்ணில் பிறந்துசாயி பாயில் படுக்கும்நோய்களைந்தான் 
விண்ணில் பறந்துஏனோ பாம்பு பாயில்படுக்கை கொண்டான் 
அந்தசத்யசாயி பகவான் உலகில் நடக்கும்காலம் வருமா
நித்யமாகஅவனும் அருளைக்கொடுக்க ஞாலம் பெறுமா
சத்ய சாயி பகவான்மனித உருவம் தாங்கி வருவான் 
பிரேமசாயி வடிவாய் இனித்த பாசம் பாரில் தருவான் 
நல்ல பிரேமசாயி வடிவாய் நம்ம சத்ய சாயி வருவான்

கற்ககல்வி தந்தான் கற்றபின் நிற்கசொல்லித் தந்தான்
பொற்கரங்கள் தன்னால் சாயிராம் சிறப்பெலாம்கொடுத்தான் 
அந்தசத்யசாயி பகவான் உலகில் நடக்கும்காலம் வருமா
நித்யமாகஅவனும் அருளைக்கொடுக்க ஞாலம் பெறுமா
சத்ய சாயி பகவான்மனித உருவம் தாங்கி வருவான் 
பிரேமசாயி வடிவாய் இனித்த பாசம் பாரில் தருவான் 
நல்ல பிரேமசாயி வடிவாய் நம்ம சத்ய சாயி வருவான்


இருக்க வீடு தந்தான் தாயாய் இருக்கமாய் அணைத்தான்
இருக்கேன்என்றுசொல்லி சாயி பயத்தைப் போக்கிநின்றான் 
அந்தசத்யசாயி பகவான் உலகில் நடக்கும்காலம் வருமா
நித்யமாகஅவனும் அருளைக்கொடுக்க ஞாலம் பெறுமா
சத்ய சாயி பகவான்மனித உருவம் தாங்கி வருவான் 
பிரேமசாயி வடிவாய் இனித்த பாசம் பாரில் தருவான் 
நல்ல பிரேமசாயி வடிவாய் நம்ம சத்ய சாயி வருவான்

கண்ண..ணும்-அவன் தான் அந்த ராம..னும்-அவன்..தான்
அல்லாஏசுசர்வ தர்ம தெய்வமும் அவன்தான் 
அந்தசத்யசாயி பகவான் உலகில் நடக்கும்காலம் வருமா
நித்யமாகஅவனும் அருளைக்கொடுக்க ஞாலம் பெறுமா
சத்ய சாயி பகவான்மனித உருவம் தாங்கி வருவான் 
பிரேமசாயி வடிவாய் இனித்த பாசம் பாரில் தருவான் 
நல்ல பிரேமசாயி வடிவாய் நம்ம சத்ய சாயி வருவான்

நோயும்பயமும் போக தினமும் சேவைசெய்து உழைப்போம்
சாயிபாதம்பணிவோம் அவனை நாமம்சொல்லி அழைப்போம்
சாயி நாமம்சொல்லி அழைப்போம்

சாயி ராம ராமா சத்ய சாயி ராம ராமா
சாயி ராம ராமா ஷீரடி சாயி ராம ராமா
சாயி ராம ராமா பிரேம சாயி ராம ராமா

சொல்லச்சொல்ல முடிந்திடுமோ அவன்புகழ் 
அள்ளஅள்ளக் குறைந்திடுமோ 
வெல்லமென இனிக்குமவன் பேர்சொல்லித் 
துள்ளித்துள்ளி குதித்திடுவோம் 
நாமெல்லாம் துள்ளித்துள்ளி குதித்திடுவோம்

சாயி ராம ராமா சத்ய சாயி ராம ராமா
சாயி ராம ராமா ஷீரடி சாயி ராம ராமா
சாயி ராம ராமா பிரேம சாயி ராம ராமா

ஷீரடி பர்த்தி பிரேம சாயி பகவானுக்கி – ஜெய்


No comments:

Post a Comment