Tuesday, September 12, 2017

597. இதோ அருள் தரும் முகம்(சதா சந்தோஷம்)

*********************


******************





இதோ அருள்-தரும்-முகம்  அதில்-இதம் பெறும்-மனம் 
விடாது-நம்மைக் காத்திடும் சாயிராம  நாமமும்
(3)
அடா அடா எனும்-விதம் வள்ளல் சாயி-தந்திடும் (2)
தரிசனம் பெறும்-மனம் தனை-மறந்து ஆடிடும் (2)
இதோ அருள்-தரும்-முகம்  அதில்-இதம் பெறும்-மனம் 
விடாது-நம்மைக் காத்திடும் சாயிராம  நாமமும்
இதே-அரும் பதம் ஷிரடி-வந்..திருந்தது ...

இதே-அரும் பதம் ஷிரடி-வந்..திருந்தது
மனிதனாய்ப் பாரிலே அற்புதம் செய்தது 
(2)
நமக்கென பர்த்தியில் மீண்டும் வந்திருந்தது (2)
மக்களை அனுதினம் அன்பினில் காத்தது  (2)
இதோ அருள்-தரும்-முகம்  அதில்-இதம் பெறும்-மனம் 
விடாது-நம்மைக் காத்திடும் சாயிராம  நாமமும்
எவருமே சமம்-சமம் என்றருள் தந்தது 
பலமதம் சொல்லிடும் அன்பினைத் தந்தது 
(2)
 நாமொரு அடிவர நூறடி வந்தது (2)
மனங்களை ஈர்த்தது அன்பினை ஈந்தது (2)
இதோ அருள்-தரும்-முகம்  அதில்-இதம் பெறும்-மனம் 
விடாது-நம்மைக் காத்திடும் சாயிராம  நாமமும்
ஓமெனும் ஒலியவன் மூச்சினில் ஒலித்திடும்
ஓம்..
ஓமெனும் ஒலியவன் மூச்சினில் ஒலித்திடும்
பித்தினை தீர்த்திடும் அவன்-கரம் அளித்திடும் 
நீறினை இட்டதும்  நீரினில் கரைவது  (2)
போல்வினை விட்டிடும் போதமும் கிட்டிடும் 
ஊழ்வினை விட்டிடும் போதமும் கிட்டிடும் 
இதோ அருள்-தரும்-முகம்  அதில்-இதம் பெறும்-மனம் 
விடாது-நம்மைக் காத்திடும் சாயிராம  நாமமும்
அடா அடா எனும்-விதம் வள்ளல் சாயி-தந்திடும் (2)
தரிசனம் பெறும்-மனம் தனை-மறந்து ஆடிடும் (2)
இதோ அருள்-தரும்-முகம்  அதில்-இதம் பெறும்-மனம் 
விடாது-நம்மைக் காத்திடும் சாயிராம  நாமமும்
சாயிராம சாயி ராம்..





No comments:

Post a Comment