Saturday, September 21, 2019

111. தேடி வா வா பாபா (ஓடி வா வா கண்ணா ) - RECORDED



தேடி வாவா பாபா தேடி வாவா
ஓம்கார நாதக் குரல் ஒலித்திடவே மண்ணுலகைத்
தேடி வாவா பாபா.. தேடி வாவா நீவா.. தேடி வாவா
உன் திரு நாமம் ஒன்றே கதியுமென்றே
அறியாமல் வாழ் நாளைக் கழித்தேனே
உடனிருந்தே நோயைக் களைவாயே
வினையடிச் சுவட்டினை அழிப்பாயே
தேடி வாவா பாபா.. தேடி வாவா நீவா.. தேடி வாவா
உலகை உன்பால் இழுத்தாய் அருளும் கண்ணால்
ஷீரடி பர்த்தி இருந்தவனே கலியுகக் கண்ணா
அழகுச் சிரம்மேலே குடைபோலே
தோன்றும்வடி..வானஎழில் முடியோனே
தேடி வாவா பாபா.. தேடி வாவா நீவா.. தேடி வாவா
ஜாதி மதங்கள் எல்லாம் கடந்தவனே
யாரும் களி கொண்டிடவே நடந்தவனே
அன்புடனே மீண்டும் வருவாயே
அற்புதத் திருக்காட்சி தருவாயே
தேடி வாவா பாபா.. தேடி வாவா நீவா.. தேடி வாவா
பொன்னடி..கள்தந்த எழில்சேவை
சென்றதைநான் கண்டிடவே பெரும் ஆசை
உன்னெழில் தவழ் நடையில் ஒரு பார்வை
காட்டிடவே வந்திடுவாய் எனதாசை
தேடி வாவா பாபா தேடி வாவா
ஓம்கார நாதக் குரல் ஒலித்திடவே மண்ணுலகைத்
தேடி வாவா பாபா.. தேடி வாவா நீவா.. தேடி வாவா
நாமாவளி
பாபா மண்ணைத் தேடி வா குரல் கொடுத்துப் பாடவா
பாரிலதி அற்புதங்கள் கை யசைவில் காட்டவா








No comments:

Post a Comment