Tuesday, June 28, 2022

20. சாயி உந்தன் திரு நாமம்

 

சாயிஉந்தன் திருநாமம் சத்யசாயிஉந்தன்-திருநாமம்

உள்ளம்உருகிடும் சொன்னால்போதும்

உள்ளம்உருகிடும் சொன்னால்போதும்

ஜனனமரணம் அகற்றும் சத்யசாயிஉந்தன் திருநாமம்

புட்டபர்த்தியில் தோன்றியநாமம் பன்மொழிகொஞ்சிடும் நாமம் (2)

அஞ்சுவதேனோ அபயம்தருமே பாபாஉன்திரு நாமம் (3)

நெஞ்சினிலே நெஞ்சினிலின்ப வெள்ளமே பெருகிடும்

சுந்தரவதனன் நாமம் (2)

சாயிஉந்தன் திருநாமம் சத்யசாயிஉந்தன்-திருநாமம்

விண்ணிலும் மண்ணிலும் நிறைந்தநாமம் என்மனம் கவர்ந்திடுமே (2)

வானவெளிதனில் தாரா-கணங்கள் தயங்கித் துதித்திடும்நாமம்(2)

பாரில்சொல்வேன் பாரில்சொல்வேன்உன் நாமமகிமையை

துன்பமெல்லாம் தீர்க்கும் (2)

சாயிஉந்தன் திருநாமம் சத்யசாயிஉந்தன்-திருநாமம்

உள்ளம்உருகிடும் சொன்னால்போதும்

ஜனனமரணம் அகற்றும் 

சாயிஉந்தன் திருநாமம்

சத்யசாயிஉந்தன் திருநாமம்

ஜெயஜெயபாபா ஜெயசத்யசாயி ஜெயசத்ய ஸ்வரூபனே (2)

ஷீரடிநிவாசா த்வாரகமாயி (2)

எந்தன் குறைகளைத் தீர்ப்பாய்

ஷீரடிநிவாசா த்வாரகமாயி எந்தன்குறைகளைத் தீர்ப்பாய்

காலமெல்லாம் காலமெல்லாம் உந்தன் பாவன நாமம் (2)

எண்ணி உருகினேன் நானே (2)

சாயிஉந்தன் திருநாமம் சத்யசாயிஉந்தன்-திருநாமம்

உள்ளம்உருகிடும் சொன்னால்போதும்

ஜனனமரணம் அகற்றும் 

சாயிஉந்தன் திருநாமம் திருநாமம்..திருநாமம்



No comments:

Post a Comment