Thursday, July 9, 2015

62. புவிமீண்டும் வரவேண்டும்(வரவேண்டும் வரவேண்டும்)

 

 
விருத்தம்
திங்களை முடியில் கொண்ட 
அந்த சிவனாரின் அம்சம்கொண்ட சாயீசனே
எங்களின் தெரியாத்தனமும் அறியாத்தனமும் நீங்கி
இனிதே வாழ உமதருள் வேண்டும் ஐயனே
_____________________

புவிமீண்டும் வரவேண்டும் ஸ்ரீசாயிநாதா (2)
கண்குளிரத்தரவேண்டும் திவ்யதரிசனத்தை (2)
புவிமீண்டும் வரவேண்டும் ஸ்ரீ சாயி நாதா

கரம்தனிலே-உந்தன் அருள்திருநீ..றினை (2)
நேரினில்வந்தளிக்க அவதரிப்..பாய்குருவே 
புவிமீண்டும் வரவேண்டும் ஸ்ரீசாயிநாதா
கண்குளிரத்தரவேண்டும் திவ்ய தரிசனத்தை
புவிமீண்டும் வரவேண்டும் ஸ்ரீசாயி நாதா..

அன்னைதந்தைஅல்ல அதற்கும்நீ மேலேஎன்ற (2)
எந்தன்உணர்வினை அருளிய தெய்வமே
அன்பின்மொழிபேசி பண்பின்வழிகாட்டிய (2)
உன்போல்..யாருமில்லை ஆட்கொள்ளவே..சாயி 
புவிமீண்டும் வரவேண்டும் ஸ்ரீசாயிநாதா
கண்குளிரத்தரவேண்டும் திவ்ய தரிசனத்தை
புவிமீண்டும் வரவேண்டும் ஸ்ரீசாயி நாதா..

நாமாவளி

சாயிராமராம் ஷிர்டி சாயிராம ராம்
சாயிராமராம் சத்ய சாயிராம ராம்
நன்மனம் ஏங்குது வேண்டுமுன்உரு (2)
ஜகத்குரு நீயே ஜகத்குரு (2)
காமம்போக்கி பாபம்போக்க வேண்டுமுன்உரு (2)
ஷிரிடிசாயிராம் (Chorus : பர்த்தி சாயிராம்) (repeat)

 ஷிரடி சாய் பாபாஜிக்கி - ஜெய்
சத்ய சாய் பாபாஜிக்கி - ஜெய்
 
 
 
 
 

No comments:

Post a Comment