Tuesday, March 1, 2016

99. ஸ்ரீசாயி தந்த (ஸ்ரீராமச்சந்த்ர கிருபாளு)



ஸ்ரீசாயிதந்த அன்போடிவ் வுலகினில் இருந்து உயர்ந்துநாம் வாழுவோம் (2)
அவன்தந்த சேவையைச் செய்துஅவன்திரு பதத்தை மனம்தனில் காணுவோம்
ஸ்ரீ சாயி தந்த

சந்தர்ப்பம்ஆகிடும் மனிதப்பிறவி தவசீல சேவையைக் கொண்டிட (2)
அதுவீணே மாய உலகினில்ருசி புசிஎன்னும்படியது ஆய்விட 
ஸ்ரீசாயிதந்த அன்போடிவ் வுலகினில் இருந்து உயர்ந்துநாம் வாழுவோம் 

மனத்தூய்மை கொண்டு தீனோர்க்குதானமும் செய்பவர்க்கு உகந்தவன்(2)
ஸ்வாமி என்றும் ஆனந்தம்தந்து பாசத்திலன்புத் தந்தையு..மானவன் (2)
ஸ்ரீசாயிதந்த அன்போடிவ் வுலகினில் இருந்து உயர்ந்துநாம் வாழுவோம் 

சிரமுகுடம்என்றிட விளக்கமாகும் கார்மேக அடர்கருங் கேசமும் (2)
ஆத்மானு பவம்பெறத் தாபமுற
ஆத்மானு..பவம்பெறத் தாபமுற வந்தோடும் கரத்திரு நீறதும் (2)
ஸ்ரீசாயிதந்த அன்போடிவ் வுலகினில் இருந்து உயர்ந்துநாம் வாழுவோம் 

கலியுகத்தில் உலவிப்பேச மானிடவேஷம் தனைப்புனை-சாயிராம் (2)
ப்ரேமையுதிக்க துஞ்சநீபாசம்தர வாராயோ உலகினில் தந்தையாய் (2)
ஸ்ரீசாயிதந்த அன்போடிவ் வுலகினில் இருந்து உயர்ந்துநாம் வாழுவோம் (2)
ஸ்ரீ சாயி தந்த


No comments:

Post a Comment