Sunday, March 17, 2019

102. எவ்வுலகம் சென்றாலும் (எந்த இடம் சென்றாலும்) - RECORDED





எவ்வுலகம் சென்றாலும் என்ன-தவம் செய்தாலும் (2)
சாயி-அன்பைத் தந்திடவே..றொன்றுவருமோ
பேரா..னந்தம்-தருமோ .. ஒரு நாளும் வருமோ
மந்திரத்தின் விளைவாலும் தந்திரங்கள் தன்னாலும் (2)
வந்திடுமோ அன்னையைப் போல் அன்புதருமோ
சிந்தையிலே நீகூறு சாயிஜெபமே (2)
 பேரா..னந்தம்பெறவே திருப் பாதம்எழவே (2)
என்ன-விலை தந்தாலும் செல்வதனம் வந்தாலும் (2)
வருத்திடும் வினைகளும் சென்று விடுமோ
சிந்தையிலே நீகூறு சாயிஜெபமே (2)
திருப் பாதம்எழவே பேரா..னந்தம்பெறவே
அன்பின்-மழை வாராதோ எந்தன்-குறை தீராதோ
என்றிருக்கத் துணையாகும் சாயி பதமே
சிந்தையிலே நீகூறு சாயிஜெபமே (2)
திருப் பாதம்எழவே பேரா..னந்தம்பெறவே
எவ்வுலகம் சென்றாலும் என்ன-தவம் செய்தாலும்
சாயி-அன்பைத் தந்திடவே..றொன்றுவருமோ


No comments:

Post a Comment