சாயி பஜனையினால் வரும் சாந்தியடி
சாயி நாமத்தினால் வரும் ஆனந்தமே
ப்ரேம பக்தியினால்-பண் பாடுங்கடி
சாயி ப்ரேமையினால் உருவானவன்டி
சாயி பஜனையினால் வரும் சாந்தியடி
ஜப த்யானமொன்றே பெரும் யோகமடி
குரு தரிசனமே தரும் ஞானமடி
சாயி தரிசனமே தரும் ஞானமடி
தயை தர்மம் மொன்றே நல்ல அறமுமடி
அவன் தாளல்லால் புகல் வருமோடி (2)
சாயி நாதனன்றோ பரமாத்மனடி (2)
சாயி பஜனையினால் வரும் சாந்தியடி
No comments:
Post a Comment