Tuesday, April 28, 2020

246. சத்ய சாயி உலகத்துக்கு(முத்து மாரியம்மனுக்கு திருநாளாம்) **




சத்யசாயி உலகத்துக்கு வரும்நாளாம்
அவன்சத்தியத்தை மானிடர்க்குத் தரும்நாளாம் 
(2)
 வந்திடுவான் அவனுமந்த நாரணனாய்
அவன் வந்தாலே பறந்துவிடும் ஊழ்வினையாம்
சத்யசாயி உலகத்துக்கு வரும்நாளாம் 
அவன்சத்தியத்தை மானிடர்க்குத் தரும்நாளாம்
(MUSIC)
பார்போற்றும் மானிடனாய் அவதாரமாம்
அவன்தரிசனத்தில் பறந்திடுமே அகங்காரமாம்
(2)
மங்களம் தந்திடுவான் சாயிபிரான்
அவன் மறுபடியும் பாரைக்கட்டி ஆண்டிடுவானாம் 
சத்யசாயி உலகத்துக்கு வரும்நாளாம் 
அவன்சத்தியத்தை மானிடர்க்குத் தரும்நாளாம்
(MUSIC)
திருநீறைக் கையில்தரும் நம்சாயிராம்
அதில் இக்கட்டைப் போக்கிடுவான் ஆயிஅப்பனாய் 
மானிடத்தின் உடலினிலே சிரித்திடுவானாம்
அவன் நேராக அற்புதங்கள் புரிந்திடுவானாம்
சத்யசாயி உலகத்துக்கு வரும்நாளாம் 
அவன்சத்தியத்தை மானிடர்க்குத் தரும்நாளாம்
(MUSIC)
அக்கறையாய் மக்களையே காத்திருப்பானாம்
அவன் விளக்காக உலகத்துக்கே ஒளிதருவானாம்
உறங்கிவரும் இதயங்களை எழுப்பிடுவானாம்
(SM)
உறங்கிவரும் இதயங்களை எழுப்பிடுவானாம்
நம் உள்வந்தே பாதங்களில் புகல்தருவானாம்
சத்யசாயி உலகத்துக்கு வரும்நாளாம்
அவன் சத்தியத்தை மானிடர்க்குத் தரும்நாளாம் 
 வந்திடுவான் அவனுமந்த நாரணனாய்
அவன்வந்தாலே பறந்துவிடும் ஊழ்வினையாம்
சத்யசாயி உலகத்துக்கு வரும்நாளாம்
அவன்சத்தியத்தை மானிடர்க்குத் தரும்நாளாம்






No comments:

Post a Comment