Thursday, April 30, 2020

268. சாயி நாமம் ஒண்ணே (மாடு மேய்க்கும் கண்ணே)



நாம்பூச நீறுஅதே நாம் உண்ணச் சோறுஅதே (2)
கையிருக்கும் வெண்ணைஅதே நெய்யைத்தேடி அலையும் பெண்ணே
சாயிநாமம்-ஒண்ணே நமைக்-காக்கும்வேதம் பெண்ணே
நான்பூச வேறுஉண்டு நான்உண்ணச் சோறுஉண்டு (2)
உல்லாசமாய் அனுபவிக்க உலகினிலே நூறுஉண்டு
என்னவேணும்-பின்னே வி..டைசொல்..வாயேபெண்ணே
வேறென்ன வேணும்-பின்னே வி..டைசொல்..வாயேபெண்ணே

அம்மா விதிவசத்தால் துன்பமின்பம் மாறிவரும்
துன்பஅலை வந்தடித்தால் கலங்கிடுவாய் பெண்மணியே
சாயிநாமம்-ஒண்ணே ... நமைக்-காக்கும்வேதம் பெண்ணே
அள்ளக்குறை..யாதசெல்வம் தொல்லைகள்த..ராதசுற்றம் (2)
புத்திஉள்ள பிள்ளைச்செல்வம் யாவும்கொண்ட என்னைத்துன்பம்
என்னசெய்யும் பெண்ணே வி..டைசொல்வாயே-நீயே

பல்பிறப்பாய்-நமைத்தொடரும் கோரமான-வினைகள்வந்தே
புரட்டி-உனைஎடுத்தால் கலங்கிடுவாய்-பெண்மணியே
சாயிநாமம்-ஒண்ணே ... நமைக்-காக்கும்வேதம் பெண்ணே
நாட்டு ஜனங்கள்எல்லாம் என்னைக்கண்டு வணங்கிடுவார் (2)
கூட்டமாக வந்துஎந்தன் பெருமைகளைப் பாடிடுவார்
வினைகள்வந்து என்னை என்னசெய்யும்சொல்லு பெண்ணே
அந்த வினைகள்வந்து என்னை என்னச்செய்யும்சொல்லு பெண்ணே

சொன்னதென்ன நல்லதென்று காலனிங்கே வந்துகேட்டால் (2)
என்னபதில் சொல்லிடுவாய் சிறப்புடைய பெண்மணியே
சாயிநாமம்-ஒண்ணே அப்பொ-நம்மைக்-காக்கும்பெண்ணே
கேட்டிருக்கேன் அவனப்பத்திப் படிச்சிருக்கேன் யமனைபத்தி (2)
சாயிநாமம் எமபயத்தைப் போக்கிடுமா சொல்லுபெண்ணே (2)
போக்கிடுமாபெண்ணே நீசொல்லு..வாயே முன்னே


மீளா யமபயமும் தொடர்வினை பவபயமும் (2)
நம்மைவிட்டு ஓடிவிடும் சாந்திநமைத் தேடிவரும்
சாயிநாமம் தன்னை நாம் சொல்லச்சொல்ல பெண்ணே
ஆஹாஹா அப்படியா நாமம்சொர்க்கத்..தின்படியா (2)
சொல்லுவேன்நான் உடனடியாய் ஆயிடுவேன் உருப்படியாய் (2)
சாயிநாமம்-தன்னை நாம்சொல்லிடுவோம்-முன்னே
அந்த சாயிநாமம்-தன்னை நாம் சொல்லிடுவோம்-முன்னே
நாமாவளி
சாயி ராமராமா  சத்யசாயிராம ராமா (5)





No comments:

Post a Comment