Friday, May 1, 2020

382. கனிந்து-சாயி நாமம் கூறுங்கள்(இறைவனிடம் கையேந்துங்கள்)



இனிய-சாயி நாமம்-கூறுங்கள் 
அதைக் கூறுவதால் போகுது தொல்லை

கனிந்து-சாயி கீதம்-பாடுங்கள் 
அதைப் போல-ஒரு ஆனந்தமில்லை
(2)
இனிய-சாயி நாமம்-கூறுங்கள் 
அதைக் கூறுவதால் போகுது தொல்லை

அன்புத்-தந்தை என்ற-பேரைக் கொண்டானவன்
அன்பினுக்கோர் எல்லை-என்று நின்றானவன்
(2)
ஆத்ம-ரூபம் என்று-நமை அழைக்கின்றவன் 
ப்ரேம-ரூபம் கொண்டு-அன்பைக் கொடுக்கின்றவன்
இனிய-சாயி நாமம்-கூறுங்கள் 
அதைக் கூறுவதால் போகுது தொல்லை
ஆசை-கொண்டு பூசை-என்று பேரைச்-சொல்லுங்கள் 
அன்பு-சேவை செய்து-உங்கள் விதியை-வெல்லுங்கள் 
   வேதமாக இதனைச்-சொன்ன அன்பு-ஆண்டவன்
சாயிராமன் என்ற-மனித வேஷம்-பூண்டவன்

அவன்-பெயரை ஒரு-தடவைக் கூறிப் பாருங்கள் 
எமபயமே இல்லை-என்று ஆடிப்பாடுங்கள்
மானிடனாய் அவனை-எண்ணித் தள்ளாதீர்கள் 
ஆண்டவனே அதனில்-ஐயம் கொள்ளாதீர்கள்
அவன் ஆண்டவனே அதனில்-ஐயம் கொள்ளாதீர்கள்
இனிய-சாயி நாமம்-கூறுங்கள் 
அதைக் கூறுவதால் போகுது தொல்லை
கனிந்து-சாயி கீதம்-பாடுங்கள் 
அதைப் போல-ஒரு ஆனந்தமில்லை


நாமம்-தனை நாவாலே உருகிச் சொல்லுங்கள் 
சேவைதனைக் கையாலே புரிந்து நில்லுங்கள்
என்று-நமக்கு உய்யும்-பாதை வகுத்துத் தந்தவன்
யோகமென்று இதனை கீதை தன்னில்  சொன்னவன்

அலையில்-யோகத் துயிலைக்-கொள்ளும் அந்த-நாரணன் 
அலையும்-உலகைக் காக்க- அதனில் வந்த-பூரணன்
தலைவன்-என்று அமர்ந்து-வேலை வாங்கிடாதவன் 
தானிரங்கித் தானிறங்கிச் சேவை செய்பவன் (2)
அந்த..

சாயி நாமம்- தன்னைக்கூறுங்கள் 
அதைக் கூறுவதால் போகுது தொல்லை
(2)
இனிய-சாயி கீதம்-பாடுங்கள் 
அதைப் போல-ஒரு ஆனந்தமில்லை
சாயி நாமம்- தன்னைக்கூறுங்கள் 
அதைக் கூறுவதால் போகுது தொல்லை

நாமாவளி
சாயிராம சாயிராம சாயிராம சாயிராம 
போலோ சாயிநாத் மகாராஜ்க்கி-ஜெய் 





No comments:

Post a Comment