Monday, May 4, 2020

519. அன்னை- தந்தை தெய்வம்-சாயி(அன்னை அன்னை)


அன்னை-தந்தை தெய்வம்-சாயிராமனுக்கு மங்களம்
ஷிரடி-பர்த்தி ப்ரேம-சாயி ராமனுக்கு மங்களம்
மண்ணிலே சிறந்த-அன்னை ஈஸ்வரிக்கு பாலனாய்
சத்தியத்து ரூபமாய்-உதித்த தாய்க்கு மங்களம்

ஊழ்வினை பவங்கள்-நம்மை ஏழ்-பிறப்பி..லெங்கணும்
வாழ்விலே தொடர்ந்துருத்தும்  தீமையைக் களைந்திடும்
நாவிலே இனித்த-சொல் ஒலித்திருக்கும் பான்மையும்
வாடுவோர்க்குச் சேவையைப் புரிந்து-வாழும் மேன்மையும்
தந்த-சாயி தன்-கரத்து வந்த-நீறு ஆறுமாய்
விந்தையாக மாற்றம்-செய்து பாதை-காட்டும் குருவுமாய்
வந்த-அன்புத் தந்தை-சாயி ராமனுக்கு மங்களம்
ஷிரடி-பர்த்தி ப்ரேம-சாயி ராமனுக்கு மங்களம்

சேவை-என்ற யோகம்-ஏற்று ஞான-தீபம் ஏற்றுவோம்
தேவை-ஒன்று வேறு-இல்லை என்றுணர்ந்து போற்றுவோம்
சாயி-நாமம் ஒன்று-கொண்டு யம-பயத்தை வெல்லுவோம்
கூறிடத் திதிக்கும்-சாயிநாமம்-தன்னைச்சொல்லுவோம் (3)

சாயிராம..சாயிராம..சாயிராம..சாயிராம் (2)






No comments:

Post a Comment