Monday, May 4, 2020

567. சொற்பதம்(கற்பகவல்லி-நின்பொற்பதங்கள்பிடித்தேன்-TMS) **


பல்லவி
சொற்பதம் கொண்டு-நின் அற்புதங்கள் தனையே
எப்படிச் சொல்வேனய்யா..சாயி..
சரணம்
அப்பனே-நான் எனது சிறுமதி..யால்-முயன்று (3)
குற்றம் நிறைந்த உயர்வில்லாத மூடன் எந்தன் (3)
( சொற்பதம்கொண்டு-நின்..)
நீயுந்தன் லீலைதன்னை என்னிடமே புரிந்தாய் (2)
நானந்த தாயுளத்தை பாட்டினில் கூறிடவோ
நீயுந்தன் லீலைதன்னை என்னிடமே புரிந்தாய்
நானந்த தாயுளத்தை பாட்டினில்கூறிடவோ
வேறென்ன வேண்டும் ஐயா பேதை எனக்குலகில்(3)
ஆனந்தம் வேறிலையே மாபெரும் பாக்யம்ஐயா (2)
( சொற்பதம்கொண்டு-நின்..)
எல்லோரின் நெஞ்..சுள்ளும் புகுந்தே அன்பு-பெய்தே(2)
பஞ்சாகச் செய்..ததோர் அற்புதமே(2)
நித்யம் அன்பாகவே..
அன்பாகவே உலாவி பாவம்கழிய
அன்பாகவே உலாவி பாவம்கழிய உந்தன்
திருக்காட்சியே ஆஹா ஒன்று-போதுமேஐயா(2)
( சொற்பதம்கொண்டு-நின்..)
பாகோ கனியமுதோ ப்ரேமையின் கடல்தானோ
பாகோ கனியமுதோ ப்ரேமையின் கடல்தானோ
தேனோ தீந்தேனோ அடடா உன..து-மனம்
(2)
அன்பே உன்ரூபம்…
அன்பே உன்ரூபம் வேறிலையே
அன்பே உன்ரூபம் வேறிலையே ஐயா
யார்க்கும் அருள் பொழியும் மகிமையை மானிடன்நான் (2)
( சொற்பதம்கொண்டு-நின்..)
பஞ்செனும் நெஞ்சிலே அன்பையே எம்பிரான்
பஞ்செனும் நெஞ்சிலே அன்பையே எம்பிரான்
தந்திங்குலாவிடும் காட்சியே அற்புதம்
(2)
சொல்லிடவே முயன்றேன் (2)
சாயீஉன் சேய்நான்
எனக்கிலையே-சாயிராம் அதற்குத் திறம்ஐயா
சொற்பதம் கொண்டு-நின் அற்புதங்கள் தனையே

எப்படிச்சொல்வேனய்யா



No comments:

Post a Comment