Wednesday, August 23, 2023

639.அழைக்கும் ஓர் சொல்லுக்கே வருவாய்(அழகென்ற சொல்லுக்கு முருகா)**


சாய்ராம் .. 
(SM)
சாய்ராம் ..
(MUSIC)
அழைக்கும் ஓர் சொல்லுக்கே வருவாய்
அழைக்கும் ஓர் சொல்லுக்கே வருவாய்
உன்னை அழைக்கின்ற அவசியம் இல்லாதும் வருவாய்
அழைக்கும் ஓர் சொல்லுக்கே வருவாய்
உன்னை அழைக்கின்ற அவசியம் இல்லாதும் வருவாய்
அழைக்கும் ஓர் சொல்லுக்கே வருவாய்
(MUSIC)
இடர் நூறு வந்தாலும் பெருமா
வினை ஆயிரம் என்னையே தின்றாலும் பெருமா
இடர் நூறு வந்தாலும் பெருமா
வினை ஆயிரம் என்னையே தின்றாலும் பெருமா
பதறாமல் உன் நாமம் உரைத்தால் (2)
வலி இருந்தாலும் தெரியாது உன்னரும் அருளால்
அழைக்கும் ஓர் சொல்லுக்கே வருவாய்
(MUSIC)
வேண்டி ஏன் கேட்கணும் பெருமா 
உன்னை வேண்டியே கேட்டிடும் தேவை ஏன் சாய்ராம்
வேண்டி ஏன் கேட்கணும் பெருமா 
உன்னை வேண்டிடும் தேவையே இல்லையே சாய்ராம் 
தாய்  நீ தந்தை நீ சாய்ராம் (2)
ஞானம் தருகின்ற குருநாதன் நீயன்றோ பெருமா
அழைக்கும் ஓர் சொல்லுக்கே வருவாய்
உன்னை அழைக்கின்ற அவசியம் இல்லாதும் வருவாய்
அழைக்கும் ஓர் சொல்லுக்கே வருவாய்
(MUSIC)
குன்றாது குறையாது இறைவா 
உந்தன் அன்பென்னும் பெரும் ஊற்று குறையாது சாய்ராம்
குன்றாது குறையாது இறைவா 
உந்தன் அன்பென்னும் பெரும் ஊற்று குறையாது சாய்ராம்
திட்டி உனை ஏசினும் பெருமா (2)
என்னை பங்காரு எனக் கொஞ்சும் உனக்கீடு வருமா
அழைக்கும் ஓர் சொல்லுக்கே வருவாய்
(MUSIC)
பிறரின் இடர் கண்டதும்தன் கண்ணால் விடும் நீருக்கே
 மாற்றாக உன்னையே தருவாய் 
பிறரின் இடர் கண்டதும்தன் கண்ணால் விடும் நீருக்கே
 மாற்றாக உன்னையே தருவாய் 
அடடடா என்று நீ வருவாய் (2)
வந்தே வாடுவோர் கன்னத்தில் ஓடும் நீர் துடைப்பாய்
அழைக்கும் ஓர் சொல்லுக்கே வருவாய்
(MUSIC)
அன்புக்கோர் உருவமே நீதான் 
நெஞ்சில் தோன்றிடும் ப்ரேமைக்கு எல்லை நீ பெருமா
அன்புக்கோர் உருவமே நீதான் 
நெஞ்சில் தோன்றிடும் ப்ரேமைக்கு எல்லை நீ பெருமா
எல்லோரும் உய்யவே அன்பாய் (2)
வந்த கலியுக அவதார இறைவனே நீ தான் 
அழைக்கும் ஓர் சொல்லுக்கே வருவாய்
உன்னை அழைக்கின்ற அவசியம் இல்லாதும் வருவாய்
அழைக்கும் ஓர் சொல்லுக்கே வருவாய்
சாய்ராம் .. சாய்ராம் .. 




முதல் பக்கம் 

No comments:

Post a Comment