பாயுமினி..மேலெதற்கு .. தூக்கமில்லையே எனக்கு (2)
ஓய்ஒழிவு..மேஎதற்கு .. துன்பமினி மேலெனக்கு
சாயுலகத்துறையவில்லை .. ஏனுமிந்த வாழ்க்கையும்தான்
மாயமிடர் போக்கிடவே .. யாருமில்லையே சாயிமா
(2)
தாயின்மடி போனபின்பு .. கேவும்குரல் தான்எனக்கு
(2)
வாழ்வும்விட..மே-எனக்கு .. இனிஉயிரும் ஏன்எதற்கு
(2)
வாழ்வில்இதம் சேர்க்குமுந்தன் அன்பினொளி வீசினையே
(2)
மானுடத்தில் பேசிடவே .. நீ-இங்கில்லையே சாயிமா
(2)
நீ-இங்கில்லையே சாயிமா
சாதலளி நீ-எனக்கு..சாந்தமது..வேஎனக்கு
வேதமென ஒளிர்ந்தனையே வித்தைஎன ஒளிந்தனையே
(2)
சோகமொரு ஆறெனவே .. பொங்கிவரும் போதினிலே
(2)
தேற்ற-உனைக் காண்கிலேனே .. என்னுயிரே சாயிமா
(2)
தாக்குமிடி..யே-எனக்கு .. நிம்மதியு..மா-உனக்கு (2)
தாங்கும்படி..யாஇருக்கு .. வெற்றி-இது..வாஉனக்கு
(2)
தாரணியில் வா-உடனே .. வாழ்ந்திருக்கும் உருவமுமாய்
உனை-அருவ..மாய்-உணர .. திறனில்லையே சாயிமா
(2)
No comments:
Post a Comment