Thursday, March 5, 2020

136. சாயீசன் திருநாமம் (கோவிந்த கோவிந்த அனி கொலுவரே )



சாயீசன்திருநாமம் படகாய்க் கொண்டே
செல்வோமேவாழ்வின் கடலிலே
(2)
சாயீசன்திருநாமம் படகாய்க்கொண்டே

பெரும்அச்சம்-பாபமும் ஓடவே அதுசுத்தமாக்கிடும் கூறவே (2)
உறவுமாகிவிடும் பாரிலே (2)
வினைதரு துன்பமெல்லாம் பனியென விலகவே
உறவுமாகிவிடும் பாரிலே வினைதரு துன்பமெல்லாம் பனியென விலகவே
சாயீசன்திருநாமம் படகாய்க் கொண்டே
செல்வோமேவாழ்வின் கடலிலே 
சாயீசன் திருநாமம் படகாய்க் கொண்டே

மானிட சிறுகாயம் தன்னிலே 
ஆண்டவன் வந்தானே அருள்கூரவே
(2)
கொண்டதன் நாமம்தனின் வடிவாகவே
வந்துஇவ் உலகிலே அற்புதம்படைக்கும்
சாயீசன் திருநாமம் படகாய்க் கொண்டே
செல்வோமே வாழ்வின் கடலிலே
சாயீசன் திருநாமம் படகாய்க் கொண்டே

தேடிடும் ஞானியரின் நெஞ்சிலே
சொல்லிட முடியாத ஒளியிலே
(2)
தோன்றிடும் பரமாத்மன் நம்சாயியே (2)
பாவங்கள் கழுவிவிடும் தூய்மையளிக்குமுடன்
தோன்றிடும் பரமாத்மன் நம்சாயியே 
பாவங்கள் கழுவிவிடும் தூய்மையளிக்குமுடன்
 சாயீசன் திருநாமம் படகாய்க் கொண்டே
செல்வோமே வாழ்வின் கடலிலே
சாயீசன் திருநாமம் படகாய்க் கொண்டே
சாயீராம்.. சாயீராம்... சாயீராம்.. சாயீராம்

No comments:

Post a Comment