Monday, April 20, 2020

148. சாயிராமெனும் திருநாமம் (காஞ்சி மாநகர் போகவேண்டும்)


சாயிரா..மெனும் திருநாமம் அதை நாளும்நம் நெஞ்..சிலே கொள்ள வேண்டும்
ஓம்எனும் ப்ரணவத்தின் ஒலியாகும்
தியானத்தை வளர்க்கும் ஒளியாகும்
வாழ்வில் நலம் சேர்க்கும் பெரும்துணை..யாய்க்காக்கும்
சாயிரா..மெனும் திருநாமம் அதை நாளும்நம் நெஞ்..சிலே கொள்ள வேண்டும்
 பரமனைக் காட்டும் வழியாகும்
திடமானநெஞ்சை அது சேர்க்கும்
அருள்ஞானப் பாதை அது காட்டும்
வாழ்வில் நலம் சேர்க்கும் பெரும்துணை..யாய்க்காக்கும்
சாயிரா..மெனும் திருநாமம்அதை நாளும்நம் நெஞ்சிலே கொள்ளவேண்டும்(2)
நாமா வளி
ஓம்ஸ்ரீ சாயிராம் ஜெயஸ்ரீ சாயிராம் ..(n)




No comments:

Post a Comment