ஷிரடிசாயி சத்யசாயி ப்ரேமசாயி
சத்குரு (2)
கலியுகத்தில் அவதரித்த தெய்வமும் சாயி
இனித்துலகில் அன்பளித்த தந்தையும் சாயி
பிறவிப்பிணி போக்கவந்த திருவருள் சாயி சகல
உலகங்களும் தோன்றிவந்த கருவறை சாயி
ஷிரடிசாயி சத்யசாயி ப்ரேமசாயி சத்குரு (2)
பர்த்தியிலே இருந்தாயே சாயிபிரானே
இமை மூடாமல் காத்தாயே சாயிபிரானே
இந்த யுகத்திலெல்லாம் பாடினாலும் சாயிபிரானேஉன்
புகழ்கூற முடிந்திடுமோ சாயிபிரானே
ஷிரடிசாயி சத்யசாயி ப்ரேமசாயி சத்குரு (2)
எல்லையில்லா அன்புதந்தாய் சாயிபிரானே
நீ எல்லோரையும் ஆட்கொண்டாய் சாயிபிரானே
சேவைசெய்ய சொல்லித்தந்து சாயிபிரானே எங்கள்
பாவம்போக வழிகொடுத்தாய் சாயிபிரானே
ஷிரடிசாயி சத்யசாயி ப்ரேமசாயி சத்குரு(3)
No comments:
Post a Comment