Tuesday, April 21, 2020

165. பர்த்தியிலேகணந்தோறும்(T:தென்பழனிமலையோரம்-சீர்காழி)


பர்த்தியிலே கணம்தோறும் சாயிநாம இசைகேட்கும் (2)
பக்தர்களின் பெருங்கூட்டம் நாள்தோறும் அலைமோதும்  (2)
பர்த்தியிலே கணம்தோறும் சாயிநாம இசைகேட்கும்
சாயிராம்.. சாயிராம் + (MUSIC)
திருப்பதத்தைத் தொட்டிடவே ஆவலுடன்-முகம்காணும் (2)
அனுமதி பெற்றிடவே பாபா-என்றேவேண்டும் (2)
பர்த்தியிலே கணம்தோறும் சாயிநாம இசைகேட்கும்+ (MUSIC)
வாழ்வில்தினம்-போராடி ஸ்வாமியவன் மடிதேடி (2)
சாயிநாமம்-தனைக்கூறி  வருபவர் பலகோடி (2)
கரமுதிரும் நீறினையே அன்பாய்அவன் அளித்தணைக்க (2)
பார்த்தவர்க்கு கண்சோரும் பக்தருக்குப் பிணிதீரும்
பர்த்தியிலே கணம்தோறும் சாயிநாம இசைகேட்கும்
பக்தர்களின் பெருகூட்டம் நாள்தோறும் அலைமோதும் சாயிராம்..சாயிராம்
சாயிராம்.. சாயிராம்.. சாயிராம்..(6)



No comments:

Post a Comment