Tuesday, April 21, 2020

166. உள்ளமெங்கும் (உள்ளமெனும் கோவிலிலே-சீர்காழி)


சாயிராம்..சாயிராம்.. சாயிராம்.. .. ஆ..ஆ..ஆ..
உள்ளமெங்கும் அன்பினையே கொண்டிடுவாய் மனிதா (2)
அன்புசேவை புரிவாய் என்றுசொன்னாய் சாயிராம் (2)
 உள்ளமெங்கும் அன்பினையே கொண்டிடுவாய் மனிதா+(MUSIC)
எள்ளளவும் மாசே .. ஆ..ஆ..ஆ..
எள்ளளவும் மாசே இருக்காத தூயவனே (2)
மண்ணில் பொழிந்த அன்பு.. மழையே
மண்ணில் பொழிந்த அன்பு.. மழையே சாயிராமனே
உள்ளமெங்கும் அன்பினையே கொண்டிடுவாய் மனிதா+(MUSIC)
காய்ந்துவறண்டநிலம் தழைத்திடநீர் தந்தாய்
வருத்திடும்-நோய்தீர்க்க மருந்தகம் தந்தாய்
அல்லும்பகலும் மண்ணில் சேவைகள் புரிந்தாய் (2)
மனங்களிலே புகுந்து மாற்றம் புரிந்தாய் (2)
விரைவாய் அன்புருவாய் நீஉலகில்அவதரித்து
வருவாய் தாயுருவாய் நீ இன்றே தாமதமேன்
பிரிவால் ஒருகணமும் பலயுகம்போல் காண்கிறதே
அறிவாய் நீசாயிராம் நீ உருவாய் வாசாயிராம்
மனம்அறிந்து தருபவனே இகம்பிறந்து வருபவனே
அனுதினமும் உனைத்தொழுதே நீவரவே பாடுகிறேன்
வான்உறையும் மால்சிவனே வாவிரைவில்ஆண்டவனே
இகத்தினிலேஅன்புருவாய் சாயிபிரான் வாஇன்றே
சாயிபிரான் வாஇன்றே சாயிபிரான் வாஇன்றே



No comments:

Post a Comment