Tuesday, April 21, 2020

169. தாயெனும் அன்புருவில் (ஆயிரம் பாட்டெழுதி-TMS)


தாயெனும் அன்புருவில் தந்தையென்ற குருவடிவில்
கலியுகத்தில் பிறந்துவந்தாய் பாபா-மண்ணை அன்புதந்தே காப்பதற்கு+ (SM)
தாயெனும் அன்புருவில் தந்தையென்ற குருவடிவில்
கலியுகத்தில் பிறந்துவந்தாய் + (MUSIC)
அன்பை மனம்புகுத்தி சத்தியத்தை நன்குணர்த்தி (2)
பாடுபட்டு உழைத்தாய்நீ பாபா-மண்ணைக் காப்பதற்கு வேறெதற்கு
தாயெனும் அன்புருவில் தந்தையென்ற குருவடிவில்
கலியுகத்தில் பிறந்துவந்தாய் + (MUSIC)
வாழ்வு சலிக்குதென்று வாடிநின்ற பூமியில்
வாழ்வு சலிக்குதென்று வாடிநின்ற பூமியில்ஓர்
ஸ்வாமிஎனப் பிறந்தாய்நீ பாபாஉன்னைப் பார்த்துவிட்டால் பிறப்பெதற்கு
தாயெனும் அன்புருவில் தந்தையென்ற குருவடிவில்
கலியுகத்தில் பிறந்து வந்தாய் + (MUSIC)
வேதம் நான் அறியேன் அதன்சந்தப் பாட்டறியேன் (2)
பாட்டினிலே தொழுதேன்ஓம் வடிவாய்உன்னை
ஞானம்வந்தே பார்ப்பதற்கு
தாயெனும் அன்புருவில் தந்தையென்ற குருவடிவில்
கலியுகத்தில் பிறந்து வந்தாய் பாபா-மண்ணை அன்புதந்தே காப்பதற்கு



No comments:

Post a Comment