Tuesday, April 21, 2020

173. தினம்தினம் ஓர் ஆறு (மணிமுடி ஓராறு)



தினம்தினம் ஓர்ஆறு போல்விழி நீரோடு பணிந்திட சாயிபதம் தன்னைத்தேடி
வரும் பக்தர்கள் பர்த்தியில் கோடிகோடி + (MUSIC)
(2)
சிவசக்தி அம்சம்கொண்டு சாயிஎன்ற நாமம்கொண்டு (2)
அவதரித்..தவன்மண்ணில் வருவான்டி
அவன் பவனியைக் காணவேண்டும் கண்கள்கோடி
தினம்தினம் ஓர்ஆறு போல்விழி நீரோடு பணிந்திட சாயிபதம் தன்னைத்தேடி
வரும் பக்தர்கள் பர்த்தியில் கோடிகோடி + (MUSIC)
கைகளில் நீறளிக்க ... கண்முன்னே நோய்பறக்கும் (2)
தரிசனம்தந்திடுவான் பாசத்தோடு ஈரேழ்
உலகினில் யாருசொல்லு அவனுக்கீடு (2)
தினம்தினம்ஓர்ஆறு போல்விழிநீரோடு பணிந்திடசாயிபதம் தன்னைத்தேடி
வரும் பக்தர்கள் பர்த்தியில் கோடிகோடி + (MUSIC)
மனம்தனில் குலைவோர்கள் அலைஎன வருவார்கள் (2)
புகல்என அவன்பதம் தன்னைச்சேர
அவன் கலங்காதே-பங்காரு என்றுகூற..கலங்காதே-பங்காரு என்றுகூற
தினம்தினம்ஓர்ஆறு போல்விழிநீரோடு பணிந்திடசாயிபதம் தன்னைத்தேடி
வரும் பக்தர்கள் பர்த்தியில் கோடிகோடி



No comments:

Post a Comment