Wednesday, April 22, 2020

181. வாபாபாஉன் திருமுகதரிசனம் (மண்ணானாலும்-TMS)




வாபாபாஉன் திருமுக தரிசனம் தருவாயே
குருவடிவாய் மீண்டும் உயர்ந்தநல்லறிவைத் தருவாயே
(2)
கருங்கல்லாய்-பாரில் வாழும்-மனத்தைக் கரைப்பாயே (2)
உன் சொல்லால்மீண்டும் நேரில்அறத்தை உரைப்பாயே 
நீ.. வாபாபாஉன் திருமுக தரிசனம் தருவாயே
குருவடிவாய் மீண்டும் உயர்ந்தநல் லறிவைத் தருவாயே
(MUSIC)
பொன்வந்தாலும் பொருள்வந்தாலும் காசாமே**
எது யார்தந்தாலும் உன்னன்பின்முன் தூசாமே
(2)
மனம்-பாகாய்ஆக்கும் உன்னருட்பேச்சைக் கேளாமே (2)
தினம் பித்தாய்ஏங்கும் என்மனசோகம் தீராதே 
நீ.. வாபாபாஉன் திருமுகதரிசனம் தருவாயே
குருவடிவாய் மீண்டும் உயர்ந்தநல் லறிவைத் தருவாயே
(MUSIC)
சொல்லாயோஉன் ஒம்கா..ரத்..தின் குரலாலே 
பழச்சுவையாய் இனிக்கும் அதுவே அமுதம்போலாமே
(2)
ஒளிர் முத்தேஉலகில் சத்தேசித்தே சத்தியமே (2)
புவி வந்தேப்ரேமையைத் தந்தேஅருளிட நித்தியமே 
நீ.. வாபாபாஉன் திருமுகதரிசனம் தருவாயே
குருவடிவாய் மீண்டும் உயர்ந்தநல் லறிவைத் தருவாயே
கருங்கல்லாய்-பாரில் வாழும்-மனத்தைக் கரைப்பாயே
உன் சொல்லால்மீண்டும் நேரில்அறத்தை உரைப்பாயே 
நீ.. வாபாபாஉன் திருமுக தரிசனம் தருவாயே
குருவடிவாய் மீண்டும் உயர்ந்தநல் லறிவைத் தருவாயே
சாய்ராம் சாயிராம் சாய்ராம் சாய்ராம்
(**காசாமே = குறையுடையதே ஆகும்)








No comments:

Post a Comment