Wednesday, April 22, 2020

184. இனித்திடும் சாயிநாமம் (செந்திலோன் அலங்காரம்-TMS)


இனித்திடும் சாயிநாமம் போக்கும்நம் அஹங்காரம்
நித்தம்அத..னைக்கூறும் சித்தம்வரும் ஓங்காரம்
(2)
இருபெரும் அவதாரம் நிகழ்ந்தது இப்போது 
சீக்கிரம் உருவாகும் ப்ரேமையின் பிறப்பாகும் 
(2)
அதுவரை தினம்கூடிக் கூப்பிடு..வோம்பாடி (2)
சாயிராம் இந்தப்பாரில் வந்திட நாமம்கூறி (2) 
இனித்திடும் சாயிநாமம் போக்கும்நம் அஹங்காரம்
நித்தம்அத..னைக்கூறும் சித்தம்வரும் ஓங்காரம்

அவன்அருள் திருநீறு கண்பட வரும்பாரு
சேவையைப் புரிந்தோர்க்கு அதுவே பெரும்பேறு
(2)
அவனது பதம்நாடு அதையே தினம்பாடு (2)
அன்புடன் நீபாடு வருவான் உன்னோடு (2)
இனித்திடும் சாயிநாமம் போக்கும்நம் அஹங்காரம் (2)
நித்தம்அத..னைக்கூறும் சித்தம்வரும் ஓங்காரம்
சித்தம்வரும் ஓங்காரம்.. சித்தம்வரும் ஓங்காரம்..



No comments:

Post a Comment