Wednesday, April 22, 2020

186. சாயீசன் பேரை (ஓராறு முகமும்-TMS)



சாயீசன் பேரை அவன்தந்த சேவை 
தனைக் கொள்ளு வினைகொல்லு மனமே
என்றும் துணையாகும் அவைவாழ்வில் தினமே 
அந்த சாயீசன்பேரை அவன்தந்த சேவை 
தனைக்கொள்ளு வினைகொல்லு மனமே
(MUSIC)
வாரா யெனநமை அழைத்தருள் செய்யும் (2)
போராடும் நெஞ்சத்தில் அமுதமழை பெய்யும் 
சாயீசன்பேரை அவன்தந்த சேவை 
தனைக்கொள்ளு வினைகொல்லு மனமே
(MUSIC)
ஸ்வாமியெனவே பர்த்தி புரிவந்து (2)
திரு ஷீரடிபுரிதங்கி அருளினைத்தந்து
கையுதிரும்நீறால் கையுதிரும்நீறால் நம்பவ பயம்களைந்த 
தினம்தினம் நடந்துநல் தரிசனம் தந்தஅந்த 
சாயீசன்பேரை அவன்தந்த சேவை 
தனைக்கொள்ளு வினைகொல்லு மனமே
(MUSIC)
யாரணைப்பார்இனி என்துயர்த் தீயை (2)
மாலையாய்க் கண்களில் நீருடன்வாடி 
தனிமையில்ஏங்கிடும் உயிர்களையே தேடி (2)
சோகமெல்லாம் தீர்த்து தாயெனஅன்பீந்த 
சாயீசன்பேரை அவன்தந்த சேவை 
தனைக்கொள்ளு வினைகொல்லு மனமே
என்றும் துணையாகும் அவைவாழ்வில் தினமே



No comments:

Post a Comment