Tuesday, April 28, 2020

225. பர்த்திபுரி நாயகா (சத்குரு ஞானானந்தா)



விருத்தம்
ஊழ்வினையால் அனேக ஜன்மம்
பிறந்திறந்து உழலும்நமக்கு
பூவெனும் நெஞ்சம் வந்த
சேவையின் பாதை தந்த
சத்திய சாயீசனின் பொன்னொளிபாதம் போற்றி
சத்திய சாயீசனின் பொன்னொளிபாதம் போற்றி போற்றி
-------------------

பர்த்திபு..ரீநாயகா தஞ்சம் தஞ்சம்
கோகுலகோ..விந்தனே வரவேணும்அவதாரம்
நிஜமேநீ உருவாகி அன்பாகி நின்றவனே
எத்தனை இன்னலை தாங்கினை பாரிலே
பர்த்திபு..ரீநாயகா தஞ்சம் தஞ்சம்
கோகுலகோ..விந்தனே வரவேணும்அவதாரம்
பர்த்திபு..ரீநாயகா தஞ்சம் தஞ்சம்
அன்றுநீ ஷிரடியில் நீர்கொண்டு ஜோதியை
எண்ணையில் லாவிளக்கில் பார்காண செய்தனை
தெரியும்-ஐயா எனக்கு பாபாநீ இறைவனே
ஸ்ரீசாயிதேவா வருவாய்குரு..வாய்-பாபா
பர்த்திபு..ரீநாயகா தஞ்சம் தஞ்சம்
கோகுலகோ..விந்தனே வரவேணும்அவதாரம்
பர்த்திபு..ரீநாயகா தஞ்சம் தஞ்சம்
ஹே சாயிராம்.. ஹே சாயிராம்
நாமாவளி
சத்குரு நாதனே வாவாவா
சச்சிதானந்தனே வாவாவா
சர்வ தயாளனே வாவாவா
ப்ரேம சாயிராமனே வா வா வா
சத்குரு நாதா .. ஹே சாயீசா





No comments:

Post a Comment