Tuesday, April 28, 2020

240. தந்தையாய் தாய்வடிவாய்(குழந்தையாய் நீஇருந்தால்)


தந்தையாய் தாய்வடிவாய்(குழந்தையாய் நீஇருந்தால்)
 என்றைக்கு வருவாய்அய்யா சாயிராம் (2)
நெஞ்சாரச் சேவைசெய்து உன்நாமம் தனைஇசைத்து
வேண்டுகி..றோமேஅய்யா சாயிராம் (2)
வரணும் வரணுமய்யா சாயிராம்
ஸ்வாமியே வரணும்அய்யா சாயிராம்
பூமியில் வந்தேநாளும் ஸ்வாமியுன் பதம்பதித்து
தரிசனம் தருவாய்அய்யா சாயிராம் (2)
நெஞ்சாரச் சேவைசெய்து உன்நாமம் தனைஇசைத்து
வேண்டுகி..றோமேஅய்யா சாயிராம் (2)
உலகத்திலேஒரு அன்னையாய் நீஇருந்தாய்
தந்தையும் நீதானைய்யா சாயிராம் (2)
நெஞ்சாரச் சேவைசெய்து உன்நாமம் தனைஇசைத்து
வேண்டுகி..றோமேஅய்யா சாயிராம் (2)
திருவடிநடந்து இன்முகம்மலர்ந்து திருநீறைத் தருவாய்அய்யா
சாயிராம் பாரைநாடி வருவாய்அய்யா (2)
நெஞ்சாரச் சேவைசெய்து உன்நாமம் தனைஇசைத்து
வேண்டுகி..றோமேஅய்யா சாயிராம் (2)
மறுபடி வருவேனே வாஞ்சையுடன்நானே என்றதும் நீதானைய்யா
சாயிராம் திருவருள் தருவேன்என்றாய் (2)
நெஞ்சாரச் சேவைசெய்து உன்நாமம் தனைஇசைத்து
வேண்டுகி..றோமேஅய்யா சாயிராம் (2)
வரணும் வரணுமய்யா சாயிராம் ஸ்வாமியே வரணும்அய்யா சாயிராம்
நாமாவளி
(B: பஜன்-V: வருவாய் வருவாய் வருவாய் அம்மா)

வருவாய் வருவாய் வருவாய் அய்யா
குருவின் உருவாய் வருவாய் அய்யா
உன்மேனி பொன்மேனி திருக்காட்சி தாயேன்
உலகத்தை உருவாக்கும் ஓர்மாட்சி நீயே
நிஜமாகி அதையாளும் ஓர்சாக்ஷி நீயே
நடமாட வாயேன் ஹேப்ரேம சாயி
அய்யா அய்யா அய்யா அய்யா அய்யா 






No comments:

Post a Comment