Thursday, April 30, 2020

292. சாயி ராம்நாமமே (வாழ்க்கையில் என்றும் பயம் ஏது)


சாயிராம் நாமமே துணை யாகும்
அந்த நாமத்தின் இனிமைக்கு எதுஇணை யாகும்
(2)
சாயிராம் நாமமே துணை யாகும்
விசனங்கள் யாவையுமே பொடிப் பொடியாக்கும் (2)
துயரங்கள் போக்கும்மனம் துள்ளிக்களித்தாடவைக்கும் (2)
சாயிராம் நாமமே துணை யாகும்
அந்த நாமத்தின் இனிமைக்கு எதுஇணை யாகும்
சாயிராம் நாமமே துணை யாகும்
சுடர்தரும் கோது குறைகளை அதுபோக்கும்
திருநாமம் நம்தாய்போல் காக்குமன்றோ
(2)
பஞ்சினும் லேசாக நெஞ்சினை அதுவாக்கும் (2)
அஞ்சேல் அஞ்சேல்என்று அடைக்கலம் தந்திடும் (2)
சாயிராம் நாமமே துணை யாகும்
அந்த நாமத்தின் இனிமைக்கு  எதுஇணை யாகும்
சாயிராம் நாமமே துணை யாகும்




No comments:

Post a Comment