Thursday, April 30, 2020

296. ஸ்ரீ சாயி நாதன் (ஸ்ரீ ரங்க நாத குரு சேவை காண-Priya Sisters)


ஸ்ரீ சாயி நாதன் திருநாமம் கூற துயர் யாவும் ஓடிப் போகும்
திருநாமம் சொல்லி அழுகின்ற கண்ணின் நீர்-பாபம் கழுவிப்போக்கும்
(3)
ஓர்முறை சாயிராம் என்றுநாம் கூறவே
நான்மறை ஓதிய புண்ணியம் சேருமே
ஈஸ்வரி மைந்தனின் பர்த்தியின் வேந்தனின்
நாமத்தைச்  சொல்லிட உடன்வரும் மாட்சியே
 யாகம்சன்யாசம் முக்திபெறயோகம் தன்னைகொள்கின்ற பலனையே (2)
கொடுக்க சாயீசன் என்றஅழகான அவனின்திருநாமம் போதுமே (2)
கசியும்கண்ணோடு  குழையும்நெஞ்சோடு வாழ்வில் ஒருமுறையே (2)
ஸ்ரீ சாயி நாதன் திருநாமம் கூற துயர் யாவும் ஓடிப் போகும்
திருநாமம் சொல்லி அழுகின்ற கண்ணின் நீர்-பாபம் கழுவிப்போக்கும்
தூசினைப் போல நம் இடர்களைக் களைந்தே
நெஞ்சமும் மகிழ்வினில் நர்த்தனம் ஆடவே
செய்திடும் சாயிராம் அழகிய நாமமே
உலகினில் உயிர் தரும் ஓம் எனும் நாதமே
கொடிய விதிமாற்றி  கதியும்அதுவாகி மாட்சி தருகின்ற நாமமே (2)
புவியில் சுகம்யாவும்  பெற்று நலமாக வாழ வழிசெய்யும் நாமமே (2)
ஜென்ம ஜென்மங்கள் தொடரும் வினை தீரும் ஊழும் அழிந்திடுமே  (2)
ஸ்ரீ சாயி நாதன் திருநாமம் கூற துயர் யாவும் ஓடிப் போகும்
திருநாமம் சொல்லி அழுகின்ற கண்ணின் நீர்-பாபம் கழுவிப்போக்கும்
நாமாவளி
ஸ்ரீ சாயிராம சிவ சாயிராம ஹரி சாயி ராம ராமா
ஸ்ரீ சாயிராம ஹரி சாயிராம சிவ சாயி ராம ராமா
ஹரி சாயி ராமா சிவ சாயி ராமா
சிவ சாயி ராமா ஹரி சாயி ராமா



No comments:

Post a Comment