Thursday, April 30, 2020

298. பர்த்தியின் நாயகன் (சொற்றுணை வேதியன்-தேவாரம்)





பர்த்தியின் நாயகன் சாந்திப்ரதா..யகன் (2)
சத்தியத் தூயவன் நாமத்தைக் கூறிட (2)
சீக்கிரம் தோன்றிடும் ஞானத்தின் ஜோதியும் (2)
சாயிராம் அருட்பெரும்
சாயிராம் அருட்பெரும் அற்புதம் ஆகுமே (2 
பாசத்தைப் பாரினில் அளித்தா..னேஇறை (2)
பூவினும் மெல்லிய நெஞ்சத் தால்நிறை (2)
கோவிலின் கருவறை நிறைவிரூ…பாக்ஷனே (2)
சாயிராம் அருட்பெரும்…
சாயிராம் அருட்பெரும் அற்புதம் ஆகுமே (2)
விண்ணுறை ஆதவன் கதிரின் வெந்தழல் (2)
பாய்ச்சியே பூமியை பாறை யாக்கினான்
தண்ணீரை கொடுத்தது கண்ணீரைத் துடைத்தது
சாயிராம் அருட்பெரும்…
சாயிராம் அருட்பெரும் அற்புதம் ஆகுமே (2)
பொல்லது நோயது உடல் கெடுப்பது (2)
நல்லவர் ஏழைகள் உயிரைக் குடிப்பது (2)
அல்லலைப் போக்கிட மருந்தகம் தந்தது (2)
சாயிராம் அருட்பெரும்…
சாயிராம் அருட்பெரும் அற்புதம் ஆகுமே (2)
  வாக்கினில் சரஸ்வதி அருளினைத் தருவது (2)
நோக்கினில் ஞானத்தீ கனன்று மூண்டெழ (2)
கல்வியைக் கற்றிட சாலையைத் தந்தது (2)
சாயிராம் அருட்பெரும்…
சாயிராம் அருட்பெரும் அற்புதம் ஆகுமே (2)
கேட்டது கொடுப்பது கேட்காதளிப்பது
நோக்கினில் ஆயிரம் அற்புதம் செய்வது
பூமியில் மானிட ரூபத்தில் வந்தது
சாயிராம் அருட்பெரும் அற்புதம் ஆகுமே
 கேட்டது கொடுப்பது கேட்காதளிப்பது
சாயிராம் அருட்பெரும் அற்புதம் ஆகுமே..அற்புதம் ஆகுமே.. அற்புதம் ஆகுமே



No comments:

Post a Comment