Thursday, April 30, 2020

299. சாயி சாயி என்னும்போது(மத்ஸ கூர்ம வராஹ-Priya Sisters)



சாயி-சாயி என்னும்போது கண்ணில் நீரும் முட்டுதா

சாயி-சாயி என்னும்போது கண்ணில் நீரும் முட்டுதா
ஏமிஏமி என்னும்ஒலி காதை-வந்து எட்டுதா…
(2)
(MUSIC0

வெட்கம்-கொள்வ..தேனடா அச்சம்-என்ப..தேனடா 
சத்தியத்தின் அன்புத்தந்தை நெஞ்சில்..வரு..வானடா  
(2)
(MUSIC)
சாயிநாமம் சொல்லடா ஆத்மதாகம் கொள்ளடா

சாயிநாமம் சொல்லடா ஆத்மதாகம் கொள்ளடா
சொல்லுகின்ற நாவில்ஊறும் அமுதம்என்னும் தேனடா
(2)
சாயி-சாயி என்னும்போது கண்ணில் நீரும் முட்டுதா
ஏமிஏமி என்னும்ஒலி காதை-வந்து எட்டுதா.
(Music)
மாயவாழ்வு வேதனை நாளும்போதும் சோதனை
தூய்மைநெஞ்சில் சேரவேண்டும் நாமம்என்னும் சாதனை
(2)
(MUSIC)
புட்டபர்த்தி வேந்தனை ஷீ..ரடியின் நாதனை

புட்டபர்த்தி வேந்தனை ஷீ..ரடியின் நாதனை
சொல்லுகின்ற நெஞ்சம்தன்னை என்னசெய்யும் வல்வினை
(2)
(MUSIC)
சாயி-சாயி என்னும்போது கண்ணில் நீரும் முட்டுதா
ஏமிஏமி என்னும்ஒலி காதை-வந்து எட்டுதா
(Music)
இன்னுமுமேன் தயக்கமோ மாயைதந்த மயக்கமோ
சாயிநாமம் சொல்லுவோம் மாயவாழ்வை வெல்லுவோம்
(2)
(MUSIC)
(SM)
இக்கணமே சாயிபிரான் பாதம்நெஞ்சில் தேடுவோம்

இக்கணமே சாயிபிரான் பாதம்நெஞ்சில் தேடுவோம்
எக்கணமும் சாயிநாம கீதம்செய்து பாடுவோம்
(2)
(MUSIC)
நாமாவளி
சாயிராம சாயிராம சாயிராம ராமராம் (2)
ராம..ராமசாயிராம் சாயிராம ராமராம் (2)





No comments:

Post a Comment