Thursday, April 30, 2020

312. சாயிராமாஅழகுக்குமாரா-தாலாட்டு(ஸ்ரீகணேசா சிவுனி குமாரா)




சாயிராமா அழகுக் குமாரா
ஓய்வுறக் கண்வளராய் ஐயா..ஓய்வுறக் கண்வளராய்
சாயிராமா அழகுக் குமாரா
ஓய்வுறக் கண்வளராய் ஐயா..ஓய்வுறக் கண்வளராய்  
(2)
எங்களின் நாதா மென்மலர் பாதா 
எங்களின் நாதா மென்மலர் பாதா 
(3)
ஷிரடியில் நடந்துகால் வலிக்கு..மே-ஐயா 
வாவா இறைவா தூங்கிடு விரைவாய்
சாயிராமா அழகுக் குமாரா
ஓய்வுறக் கண்வளராய் ஐயா..ஓய்வுறக் கண்வளராய்
அன்றுநீ முள்பட நடந்தனை ராமா
அன்றுநீ முள்பட நடந்தனை ராமா
(3)
தந்தையின் சொல்லினைக் காத்த-ரகுவரா 
புத்தி உனக்கு-நான் சொல்ல..லாகுமா
சாயிராமா அழகுக் குமாரா
ஓய்வுறக் கண்வளராய் ஐயா..ஓய்வுறக் கண்வளராய்
தித்திக்கும் தேனாய் பேசும்சா..யீசா
தித்திக்கும் தேனாய் பேசும்சா..யீசா
(3)
தூங்கிடுவாய்பூ விழிமூ..டிஐயா 
அக்கறை..யால்-வரும் சொல்லைக் கேளைய்யா
சாயிராமா அழகுக் குமாரா
ஓய்வுறக் கண்வளர்வாய் ஐயா..ஓய்வுறக் கண்வளர்வாய்
சத்சங்க சேவைகள் நாளைக்குப் புரிவாய்
சத்சங்க சேவைகள் நாளைக்குப் புரிவாய்
(3)
கொஞ்ச நேரம்-கண் வளருநீ கண்ணா 
கெஞ்சவிடாதேநீ தூங்கு-என் மன்னா
சாயிராமா அழகுக் குமாரா
ஓய்வுறக் கண்வளர்வாய் ஐயா..ஓய்வுறக் கண்வளர்வாய்
நீ-கை..லாசபுர-சிவ..னேதான்
நீ-கை..லாசபுர-சிவ..னேதான்
(3)
ஆயினும் மனதினில்ஒரு-சே..யேதான்
பிள்ளையின் வடிவாய் வந்த-என் பாபா
சாயிராமா அழகுக் குமாரா
ஓய்வுறக் கண்வளர்வாய் ஐயா..ஓய்வுறக் கண்வளர்வாய்
ஸ்ரீசாயீச-நின் சேவையைக் கொள்..ளுவோம்
ஸ்ரீசாயீச-நின் சேவையைக் கொள்..ளுவோம்
(3) 
சாயிஉன் நாமத்தை அனுதினம் சொல்..லுவோம்
சாயிஉன் நாமத்தை அனுதினம் சொல்..லுவோம்
அதை-விடு..வோமா தயைபுரி தேவா
அதை-விடு..வோமா தயைபுரி தேவா
தூங்கிடு-பாபா
சாயிராமா அழகுக் குமாரா
ஓய்வுறக் கண்வளர்வாய் ஐயா..ஓய்வுறக் கண்வளர்வாய்
ஆரி..ராரோ ஆரிர..ராரோ ஆரிர..ராரி..ரரோ ஆராரோ ஆரிர..ராரி..ரரோ…(2)




No comments:

Post a Comment