Friday, May 1, 2020

353. ஒருமையுடன் நாமம் சொல்கிறேன் ( உரிமையுடன் உன்னை)


ஒருமையுடன் நாமம் சொல்கிறேன் 
சிறுமைகள் நீங்கச் செய்வாய் சாயிராம் 
(2)
உருகியே நாமம்சொல்வாய் உதவிடுவாய் அன்பாய் (2) 
எனும்உந்தன் போதனையே போக்கிடும் வேதனையே (2)
ஒருமையுடன் நாமம் சொல்கிறேன் 
சிறுமைகள் நீங்கச் செய்வாய் சாயிராம் 
தர்மநெ..றிகள்எல்லாம் அன்பு ஒன்றே 
நல்கதி தனைத் தரும் சேவை ஒன்றே 
என்றுநீ சொல்லிடும் பொன்மொழியே (2)
வாழ்க்கைதனில் காட்டும் நல்வழியே 
ஒருமையுடன் நாமம் சொல்கிறேன்.. சாயிராம்
ஆத்மஸ்வரூபலாரா என தினமும்குழைந்து  
பிரேமஸ்வரூபலாரா எனமனதில் கனிந்து
அழிக்குமுன் அருட்குரலை தரணியில்-கேட்கவென்றே (2) 
பாழும் மனம் கிடந்தது தவியாய் தவிக்குதைய்யே






No comments:

Post a Comment