Friday, May 1, 2020

378. சதா மிரட்டிடும்(சதா சந்தோஷம் தந்திடும் ஒரேஇடம்)


சதாமி..ரட்டிடும்விதி விரட்டிடும் அருள் நிதி
இதோ-உனக்குக் காட்டிடும் சாயி நாமமே கதி
வேதம் நான்கு மொழிந்திடும் உண்மைஅதனில் விளங்கிடும் (2)
பெருகிஅவனில் தோன்றிடும் அன்புஎன்னும் ஓர் நதி (2)
சதாமி..ரட்டிடும்விதி விரட்டிடும் அருள் நிதி
இதோ-உனக்குக் காட்டிடும் சாயி நாமமே கதி
 ஒரேமுறை ஒரேதரம் சாயிநாமம் சொல்லிடு
பவவினை  பயமில்லை மானிடா உணர்ந்திடு  
நெஞ்சினில் உருகிடு சாயிநாமம் கூறிடு (2)
அன்பெனும் அற்புதம் கண்டுநீ மாறிடு (2)
சதாமி..ரட்டிடும்விதி விரட்டிடும் அருள் நிதி
இதோ-உனக்குக் காட்டிடும் சாயி நாமமே கதி
உலகெனும் களத்திலுன் கடமையை உணர்ந்திடு
அன்பினில் சேவையே அதனைப் புரிந்திடு
கண்ணன் சொன்ன கீதையே சாயி தந்த பாதையே (2)
மனிதனின் வடிவினில் இறையவன் உணர்ந்திடு
அன்பெனும் வடிவமே சாயிராம் அறிந்திடு
சதாமி..ரட்டிடும்விதி விரட்டிடும் அருள் நிதி
இதோ-உனக்குக் காட்டிடும் சாயி நாமமே கதி
ஓம்எனும் ஒலியினை மூச்சினில் கேட்டனர் (2)
பர்த்தியில் உற்றவர் பெற்றவர் கேட்டனர்
மல்லிகைப் பூக்களைத் தரையினில் வீசினான் (2)
சாயிராம் என்றபேர் தான் எனக் காட்டினான் (2)
சதாமி..ரட்டிடும்விதி விரட்டிடும் அருள் நிதி
இதோ உனக்குக் காட்டிடும் சாயி நாமமே கதி
வேதம் நான்கு மொழிந்திடும் உண்மைஅதனில் விளங்கிடும் (2)
பெருகிஅவனில் தோன்றிடும் அன்புஎன்னும் ஓர் நதி (2)
சதாமி..ரட்டிடும்விதி விரட்டிடும் அருள் நிதி
இதோ உனக்குக் காட்டிடும் சாயி நாமமே கதி
சாயி நாமமே கதி….





No comments:

Post a Comment