Friday, May 1, 2020

395. ஆயிரம் பாட்டெதற்கு(ஆயிரம் பாட்டெழுதி-முருகன் பாட்டு)


ஆயிரம் பாட்டெதற்கு யாக-யோக..மும்-எதற்கு
வேதமுமே எனக்கெதற்கு சாய்ராம்-என்ற பேரிருக்கு வேறெதற்கு(
(SM)
ஆயிரம் பாட்டெதற்கு யாக-யோக..மும்-எதற்கு
வேதமுமே எனக்கெதற்கு + (MUSIC)
கோடிப் பணம்-எதற்கு கோட்டைபோல வீடெதற்கு (2)
பாடுபட்டு அடைந்தேன்-நான் சாய்ராம்-என்ற பேரிருக்கு வேறெதற்கு
(SM)
ஆயிரம் பாட்டெதற்கு யாக-யோகமும்எதற்குவேதமுமே எனக்கெதற்கு 
(MUSIC)
மாய இருள்-சூழ்ந்து வாடுகின்ற போதினில் 
மாய இருள்-சூழ்ந்து வாடுகின்ற போதினில்-ஓர்
ஜோதிஎனக் கிடைத்தாய்-நீ சாய்ராம்-உன்னைக் 
கண்டபின்னே வேறெதற்கு + (SM)
ஆயிரம் பாட்டெதற்கு யாக-யோகமும்எதற்குவேதமுமே எனக்கெதற்கு 
(MUSIC)
வேதம் நான்கிருக்கும் சாரத்தை வடித்தெடுத்து (2)
பாதையெனக் கொடுத்தாய்-நீ சாய்ராம்-அன்பாய்
உதவிடுவாய் என்றெமக்கு        
ஆயிரம் பாட்டெதற்கு யாக-யோகமும்எதற்குவேதமுமே எனக்கெதற்கு
சாய்ராம்-என்ற பேரிருக்கு வேறெதற்கு










No comments:

Post a Comment