Sunday, May 3, 2020

440. வழி தரும் நாமா (விழி கிடைக்குமா)



வழிதரும் நாமா அபயக் கரம்-தரும்-நாமா (2)
குருவாக உருவாகி ஒளி தரும்-நாமா (2)
(வழிதரும் நாமா..)
அலைகின்ற மனம்-ஓயும் திரு-நாமம் சொல்லும்போது (2)
பஞ்சாக ஆக்கி-நெஞ்சில் புகுந்திடும் நாமா
மென் பஞ்சாக ஆக்கி நெஞ்சில் புகுந்திடும் நாமா
(வழிதரும் நாமா..)
நம்-பாபம் போம்-சாயி திருநாமம் துணையிருந்தால் (2) 
அஹங்காரம் பொடியாகும் திருநாமத்தால்  
நம் அஹங்காரம் பொடியாகும் திருநாமத்தால்
நிலையாக நெஞ்சிருந்து அணையாகக் காத்திருந்து
துணையாக நம்-வாழ்வில் இருந்திடும்-நாமா
பெரும் துணையாக நம்-வாழ்வில் இருந்திடும்-நாமா 
(வழிதரும் நாமா..)
கோடிப்பணம் சேர்த்து-அதைக் காக்கும்-பயம் தான்-அடைந்தோம்
ஓடிக்-கோடிப்பணம் சேர்த்து-அதைக் காக்கும்-பயம் தானடைந்தோம்
யம-தூதர்  வரும்-நாளில் அது காக்குமா
உரைப்பாயே எந்த-நாளும் ஸ்ரீ-சாயி என்ற-நாமம் (2)
உனைக்காக்கும் துணையாகத் தொடர்ந்திடும் தானாய்
என்றும்  உனைக்காக்கும் துணையாகத் தொடர்ந்திடும் நாமா
       (வழிதரும் நாமா..)
நாமாவளி

சாயீசன் பேர்பாடு மனதினில் சாயீசன் பேர்பாடு
சாயீசன் பேரில் பாவங்கள்போகும் சாயீசன் பேர்பாடு..
கனிந்துநீ சாயீசன் பேர் பாடு
 அழுதிடக் காண்பதில்லை சாயிராமன் கண்ணீரை கொடுப்பதில்லை

சாயிராமன் கண்ணீரை கொடுப்பதில்லை
பழுதில்லையே நாமெல்லாம் அவனைக் கடவுளாய்க் கொள்வதிலே
அவனைக் கடவுளாய்க் கொள்வதிலே
சாயீசன் சத்யசாயீசன் சத்யசாயீசன்பேர்பாடு மனதினில் சாயீசன் பேர்பாடு
 சாயீசன் பேரில் பாவங்கள்போகும் சாயீசன்பேர்பாடு..சத்ய சாயீசன் பேர்பாடு





No comments:

Post a Comment