Monday, May 4, 2020

486. வேறு துணை இல்லையப்பா (ஆறுபடை வீடுகொண்ட ஆண்டவனே)

 வேறு-துணை இல்லையப்பா வந்திடுவாய் சாயிராம்
போதும்-எங்கள் தொல்லையப்பா வந்தருள்வாய் சாயிராம்
திருமுகத்தைக் காட்டிட-வா அழகாகச் சாயிராம்
திருப்பதங்கள் நடந்திட-வா உருவாகச் சாயிராம்  

குணத்தில்-ஒரு வெள்ளை-மனப் பாலகன்-நீ சாயிராம்
கணத்தில்-மனம் இறங்குகின்ற அன்னை-அன்றோ சாயிராம்
அயலாரென்..றாரையுமே கருதாத சாயிராம்
பொழிலாக அருள்-பொழியும் குருநாதா சாயிராம்

உன்-மொழி-தீந்..தேனாகும் துயர்-அழிக்கும் சாயிராம் 
உன்-விழி-பே..ரருள் சுரக்கும் உயர்வளிக்கும் சாயிராம் 
அன்புமனம் கொண்டு-சேவை செய்திடுவோம் சாயிராம்
சந்ததம்-உன் திருநாமம் சொல்லிடுவோம் சாயிராம்
சாயிராம சாயிராம சாயிராம சாயிராம் (2)

ஸ்ரீ ஷிரடி பர்த்தி ப்ரேம சாயி பகவானுக்கி - ஜெய்



No comments:

Post a Comment