Monday, May 4, 2020

491. ஒரு சாயி திருநாமம் (ஓம் என்று நினைத்தாலே போதும்)





ஒரு-சாயி திருநாமம் போதும் 
நம் பவ-மாய வினை-யாவும் உடன் சென்று போகும்
ஓம் சாய்ராம்..
(MUSIC)
சொல்லிட மறப்போர்க்கும் தருமே கதி 
என்ன சொல்லினும் மறுப்போர்க்கும் அதுதான் கதி
(2)
குறை சொல்லும் மாந்தர்க்கும் தருமே கதி 
பெரும் உரை நிகழ்த்தும் குருமார்க்கும் அது தான் கதி
ஒரு-சாயி திருநாமம் போதும் 
நம் பவ-மாய வினை-யாவும் உடன் சென்று போகும்
ஓம் சாய்ராம்..
(MUSIC)
ஒருநாமம்  குறை போக்கும் திரு சேர்க்குமே 
 பவ மருந்தானத் திருநீறு ஆறாகுமே
(2)
திரு நாமம் இசை சேர்த்து நாம் கூறவே 
நம் வினை-போகும் செவி கேட்கும் விருந்தாகுமே
ஒரு-சாயி திருநாமம் போதும் நம் பவ-மாய வினை-யாவும் போகும்
ஓம் சாய்ராம்..
(MUSIC)
பால் போன்ற வெண் தூய்மை அது நல்குமே 
நெகிழ் பாகாக நல் நெஞ்சை அது ஆக்குமே
(2)
மனச்-சோகம் தனைப் போக்கும் திருநாமமே (2)
அது நம்-மூச்சில் சோஹம்-என்..றுருவாகுமே
ஒரு-சாயி திருநாமம் போதும் நம் பவ-மாய வினை-யாவும் போகும்
ஓம் சாய்ராம்..









No comments:

Post a Comment